loader
ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்றால் தமிழகத்திற்குதான் நஷ்டம்! - துக்ளக் குருமூர்த்தி

ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்றால் தமிழகத்திற்குதான் நஷ்டம்! - துக்ளக் குருமூர்த்தி

சென்னை: ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்றால் தமிழகத்திற்குத்தான் நஷ்டம் என துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவர் நிச்சயம் ஆட்சியைப் பிடிப்பார் என்றும், தமிழகத்தில் தற்போது மக்களை ஈர்க்கக் கூடிய தலைவர்கள் என்று யாருமில்லை எனக் குறிப்பிட்டார்.

தமிழகத்திற்கு நிறைய செய்ய வேண்டிய கடமை ரஜினிக்கு உள்ளதாகவும் அவர் மீது மக்கள் பெரியளவில் எதிர்பார்ப்பு வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த 60 ஆண்டுகளாக தேசிய நீரோட்டத்தில் இருந்து தமிழகம் விலகியிருப்பதாகவும் ரஜினி வந்தால் இந்த நிலைமை மாறக்கூடும் எனவும் தெரிவித்தார்.

தமது நம்பிக்கை ஒரு போதும் பொய்யானதில்லை என்று கூறிய குருமூர்த்தி, ரஜினிகாந்த் முடிவு குறித்து தாம் கூறுவது சரியாக இருக்காது எனத் தெரிவித்தார்!


 

0 Comments

leave a reply

Recent News