தற்போது கமல் வழங்கி வரும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில், இது வரைக்கும் பொதுவான கருத்துகளுடன் நிகழ்ச்சியை நடத்தி வந்த கமல்ஹாசன் இப்போது அரசியல் மேடையாக அதைப் பயன்படுத்தி வருவது கண்கூடாகத் தெரிகிறது.
கொஞ்சம் கொஞ்சமாக தனது கட்சி பிரச்சார களமாக மாற்றி வருகிறார் மேடையை. தனது உடையில் அவரது அரசியல் கட்சியான மக்கள் நீதி மய்யத்தின் லோகோ அணிந்து பங்கேற்றார் அன்மையில். இது சர்ச்சையை கிளப்பியது. பொதுவான நிகழ்ச்சியல் கமல் தன் கட்சியை புகுத்துவதா என்ற கேள்வி எழுந்தது.
இதுப்பற்றி பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த கமல், இந்தக் கேள்வியை என்னிடம் மட்டுமே கேட்கிறீர்களே ஏன்? நான் என்ன புதிதாகச் செய்து விட்டேன். நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் என்று எம்.ஜி.ஆர் திரைப்படத்தில் தன் கட்சிக் கொள்கையைச் சொல்லவில்லையா. அந்த படம்கூட எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் தயாரிக்கவில்லை. நாகிரெட்டி தயாரித்தது. அண்ணாத்துரை தனது சினிமாவில், நாடகத்தில் அரசியல் பேசவில்லையா? அதுபோலத்தான் இதுவும். எனக்கு கிடைத்த மேடைகளில் எனது கட்சியை மக்களிடம் கொண்டு செல்கிறேன். கொள்கையை கொண்டு செல்கிறேன். இனி கிடைக்கிற ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், மேடையிலும் இதைச் செய்வேன் என்று கூறியுள்ளார்!
0 Comments