துருக்கி நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7-ஆகப் பதிவானது. ஏகியன் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், துருக்கியின் மேற்குப் பகுதிகள் குலுங்கியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்மிர் நகரில் சுமார் 20-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து விழுந்ததாகவும் முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. கடுமையான நிலநடுக்கம் காரணமாக மக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள்.
உண்மையான பாதிப்பு நிலவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், இடிந்து விழுந்த கட்டடங்களுக்கு இடையே பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது!
0 Comments