loader
கம்பார் தமிழ்ப்பள்ளி விளையாட்டுப் போட்டி!

கம்பார் தமிழ்ப்பள்ளி விளையாட்டுப் போட்டி!

(ரமேஸ்வரி)

கம்பார், மே. 5 :

கம்பார் தமிழ்ப்பள்ளியின் 47-வது விளையாட்டுப் போட்டி, பள்ளி மைதானத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது

கல்வி மட்டுமின்றி எல்லா ரீதியிலும் பள்ளி சிறந்து விளங்குவதோடு, பல சாதனைகளையும் தொடர்ந்து புரிந்து வருகிறது என, பள்ளியின் தலைமையாசிரியர் மு. அர்ஜுனன் தெரிவித்தார்.  கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே வேளையில், விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம் என அவர் பெற்றோர்களைக் கேட்டுக் கொண்டார். பள்ளியின் வெற்றிக்கும் திட்டங்களுக்கும் தொடர்ந்து துணை நிற்கும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம், முன்னாள் மாணவர் கழகத்தினர் மற்றும் நன்கொடையாளர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

நடைபெற்ற அனைத்து விளையாட்டுப் போட்டிகளிலும்  மாணவர்கள் உற்சாகமாகப் பங்குபெற்று திறமையை வெளிப்படுத்தினர்.

பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஜெகன், முன்னாள் மாணவர் கழகத் தலைவர் சந்திரசேகரன், வட்டாரப் பிரமுகர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் என திரளானோர் பங்குபெற்று விழாவிற்குப் பெருமை சேர்த்தனர்!

0 Comments

leave a reply

Recent News