கோத்தா கினபாலு: சபா முதலமைச்சர் ஹாஜிஜி முகமட் நூர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார். தற்போது கோத்தா கினபாலுவில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக அவரது மக்கள் தொடர்பு செயலாளர் எபெண்டி முகமட் சுனோ தெரிவித்தார்.
இதனையடுத்து, அனைத்து சபா மக்களையும் அமைதியாக இருக்கும்படி அழைப்பு விடுத்துள்ளார். மேலும், சபாவையும் மலேசியாவையும் கொரோனாவிலிருந்து விடுவிக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்வதாக ஹாஜிஜி தெரிவித்துள்ளார்!
0 Comments