பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் மறைவுக்கு முன்னணி நட்சத்திரங்கள் பலரும் உருக்கமான இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
கவிஞர் வைரமுத்து எஸ்பிபி பாடிய பல ஹிட் பாடல்களுக்கு வரிகள் எழுதியவர். இந்நிலையில் எஸ்பிபி மறைவுக்கு கண்ணீருடன் அவர் தமது இரங்கலைப் பதிவு செய்துள்ளார்.
ஆயிரம் காதல் கவிதைகள்
பாடிய உனக்குக்
கண்ணீர்க் கவிதை வடிக்க
வைத்துவிட்டதே காலம்;
இசையை இழந்த மொழியாய்
அழுகிறேன்....
என வைரமுத்து டுவிட்டரில் இரங்கல் தெரிவித்த்துள்ளார்.
மறைந்தனையோ மஹா கலைஞனே
சுரப்பதை நிறுத்துக்கொண்டதா
உன் தொண்டை அமுதம்
காற்றுவெளியை கட்டிப்போட்ட உன் நாவை ஒட்டிப்போட்டதா உன் மரணப் பசை
பாட்டுக் குயில் போனதென்று
காட்டுக் குயில்கள் கதறுகின்றன
ஒளிப்பதிவுக் கூடங்கள் எல்லாம்
ஓசை கொன்று எழுந்து நின்று,
மௌனம் அனுஷ்டிக்கின்றன.
மனிதகுலத்தின் அரை நூற்றாண்டின் மீது ஆதிக்கம் செலுத்தியவனே
மண் தூங்க பாடினாய், மலர் தூங்க பாடினாய் கண் தூங்க பாடினாய், கடல் தூங்க பாடினாய் நீ தூங்க ஒரு தாலாட்டை யார் பாடியது?
எனத் துவங்கி கலங்கியபடி கண்ணீர் கவிதை யாத்திருக்கிறார் கவிப்பேரரசு!
0 Comments