கோலாலம்பூர் செ- 10
இன்று மதியம் தொடங்கி சுமார் 4 மணி நேரம் பெய்த அடைமழையால் தலைநகரில் பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மஸ்ஜிட் ஜமேக், ஜாலான் ஈப்போ ஜாலன் துன் ரசாக் பொன்ற இடங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது. அதோடு பல வணிக நிறுவனங்கள் வெள்ளத்தால் பாதிப்புக்கு ஆளாகி உள்ளன.
தலைநகர் ஆற்றின் நீர் அளவு அதிகரித்து அபாய நிலையில் இருப்பதால், மீண்டும் மழை பெய்தால் தலைநகரில் பல இடங்களில் வெள்ளம் ஏற்படும் சூழல் தற்போது உருவாகியுள்ளது.
வெள்ளம் ஏற்பட்டுள்ள பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மாலை 7 மணி நிலவரப்படி இன்னும் தலைநகரில் போக்குவரத்து வழக்க நிலைக்குத் திரும்பவில்லை!
0 Comments