loader
செனட்டராகப் பதவியேற்றார் வேள்பாரி!

செனட்டராகப் பதவியேற்றார் வேள்பாரி!


கோலாலம்பூர், செப் 2 : நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக மஇகாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ வேள்பாரி இன்று  நியமிக்கப்பட்டார்.

இந்தப் பதவி ஏற்பு நிகழ்வில் அவரது தந்தையார் துன் சாமிவேலு, குடும்ப நண்பர் டான்ஸ்ரீ பூவன், மஇகா உதவித் தலைவரும் செனட்டருமான டத்தோ டி.மோகன் தம்பதியர் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். பதவியேற்பு நிகழ்ச்சியின்போது வேள்பாரியின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ஷைலா நாயரும் உடனிருந்தார்.

மஇகாவின் தலைமைச் செயலாளராகச் செயல்பட்டு வந்த வேள்பாரி, கடந்த ஆண்டு  அரசியலில் இருந்து ஒதுங்குவதாக  அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இன்று நாடாளுமன்ற மேலவையின் புதிய தலைவராக டான்ஸ்ரீ ராய்ஸ் யாத்திம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக மேலவைத் தலைவராகப் பணியாற்றிய மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனின் பதவிக் காலம் கடந்த ஜூன் மாதத்தில் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து புதிய மேலவைத் தலைவராக முன்னாள் அம்னோ அமைச்சரும், பெர்சாத்து கட்சியைச் சேர்ந்தவருமான ராய்ஸ் யாத்திம் நியமிக்கப்பட்டுள்ளார்!
 

0 Comments

leave a reply

Recent News