loader
மூன்று நாடுகளைச் சேர்ந்தவர்களுக்குத் தடை!

மூன்று நாடுகளைச் சேர்ந்தவர்களுக்குத் தடை!

கோலாலம்பூர், செப்டம்பர் 1 - இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் கொரோனா சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், அந்நாடுகளைச் சேர்ந்த மலேசியாவிற்கான நீண்டகால பாஸ் வைத்திருப்பவர்கள் மலேசியாவிற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி  அறிவித்தார்.

மலேசியா மை செகண்ட் ஹோம் பாஸ் வைத்திருப்பவர்கள், வெளிநாட்டவர்கள், ஸ்பௌஸ் விசா வைத்திருப்பவர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கும் இது பொருந்தும் என்றார்.

கோவிட் -19 சம்பவங்கள் நாட்டில் அதிகரிக்காமல் இருக்க, சுகாதார அமைச்சின் ஆலோசனையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தனது செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

மற்ற நாடுகளின் நிலைமையையும் அரசாங்கம் கண்காணிக்கும் என்றும், கொரோனா சம்பவங்கள்  அதிகமாகப் பரவும் பிற நாடுகளின் குடிமக்களுக்கும், இதே கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்!

0 Comments

leave a reply

Recent News