கோலாலம்பூர், ஆகஸ்ட் 28- திரையீடு காண்பதற்கு முன்னரே பல்வேறு அனைத்துலக விருதுகளைப் பெற்றிருக்கும் மலேசியத் தமிழ் திரைப்படம் 'பரமபதம்'.
அண்மையில் மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தற்போது ஆசிய சாதனை புத்தகத்திலும் இடம்பெறுவதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளதாக இப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய நிலையில் பரமபதம் திரைப்படத்திற்கு அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், இதற்காகப் பாடுபட்ட அத்தனை பேருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் பிரபு தெரிவித்தார்.
ஆசிய சாதனை புத்தகக் குழுவினர் நிர்ணயித்திருக்கும் அனைத்து தொழில்நுட்ப கூறுகளையும் ஒரு திரைப்படம் பூர்த்திச் செய்திருந்தால் மட்டுமே, அது அப்போட்டியில் இடம்பெறுவதற்கான தகுதியைப் பெறும் என்றும் விக்னேஸ் பிரபு மேலும் கூறினார்.
அதேவேளையில், மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகமான ஃபினாஸ்-இன் (FINAS) அனுமதி சான்றிதழையும் வைத்திருப்பதோடு, ஒரு வித்தியாசமான பாணியில் அமைந்திருக்கும் திரைக்கதையைக் கொண்டிருக்கும் எந்தவொரு திரைப்படமும் இதுபோன்ற போட்டிகளில் தாராளமாகக் கலந்து கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வரும் நவம்பர் 26-ஆம் தேதி இப்படம் திரையீடு காண்கிறது!
1 Comments
Muneswaran
Super 💕💕💕