கோலாலம்பூர், ஆகஸ்ட் 25 : ஸ்தாப்பாக்கில் உள்ள டேசா ரெஜாங் மக்கள் வீடமைப்புத் திட்டத்தின் குடியிருப்புப் பகுதிக்கு இன்று காலை பிரதமர் வருகை மேற்கொண்டார்.
நகர்ப்புற வாழ்க்கையைப் பல்வேறு இன்னல்களுடன் அனுபவித்து வரும் மக்களை நேரில் கண்டு, அவர்களின் தேவையைக் கேட்டறியும் நோக்கத்தில் தாம் அங்கு சென்றதாக தமது அதிகாரப்பூர்வ முகநூல் பதிவில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இதனையடுத்து, ஜே.கே.எம் எனப்படும் சமூக நலத்துறையின் கீழ், உதவிப் பெற்றுவரும் 78 வயதான சான் கம் மற்றும் தனலட்சுமி பாபு மற்றும் இரண்டு மூதாட்டிகளையும், மாற்றுத் திறனாளி தம்பதியரையும் அவர்களின் இல்லத்தில் சென்று டான்ஸ்ரீ முகைதீன் அவர்களின் சிக்கல்களைக் கேட்டறிந்தார்.
இரு கைகளை இழந்து செயற்கை காலுடன் தையல் கடை நடத்தி வருவதோடு, தமது மனைவி மற்றும் இரு குழந்தைகளையும் பராமரித்து வரும் ரொசாலி-யின் விடாமுயற்சி மற்றும் மனவலிமையைக் கண்டு தாம் வியந்து போனதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்!
0 Comments