கோலாலம்பூர் - பெரிக்காத்தான் நேஷனலை மிகப்பெரிய கூட்டணியாக உருவாக்க முவாஃபாக்காட் நேஷனலில் இணைய பெர்சத்துவின் உச்சமன்றம் இணக்கம் தெரிவித்திருப்பதாக பிரதமரும் பெர்சத்து கட்சித் தலைவருமான டான் ஶ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்தார்.
இதுதான் பெர்சத்துவிற்கு மிகச்சிறந்த முடிவாக இருக்கும் என்று தாம் நம்புவதாகவும், நாட்டில் இருக்கும் முக்கியக் கட்சிகளைக் ஒன்றாக இணைக்கும் ஒரு பெரிய சபையில் இருக்க தமது கட்சி முடிவெடுத்திருப்பதாகவும் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தில் பெர்சத்து, அம்னோ, பாஸ் மற்றும் இதர கட்சிகள் ஒன்றாக இணைவதன்வழி மக்களின் மிகப்பெரிய ஆதரவு தங்களுக்கு இருக்கும்' என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் அதிகாரப்பூர்வ முகநூலில் வெளியான காணொளியில் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தை உருவாக்கி இருக்கும் அம்னோ, பாஸ், ம.இ.கா, ம.சீ.ச, GPS, PBS, STAR மற்றும் PBRS ஆகிய கட்சிகளின் தலைமைத்துவத்துடன் தொடர்ந்து பேச்சு நடத்தப்பட்டு வருவதாக முகைதீன் குறிப்பிட்டுள்ளார்!
0 Comments