கோலாலம்பூர்: முன்னாள் காதலியின் அரை நிர்வாண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதற்காக ஓர் ஆடவருக்கு RM 4,000 அபராதம் விதிக்கப்பட்டது.
தனது முன்னாள் காதலியின் அரை நிர்வாண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதற்காக ஒரு மென்பொருள் பொறியாளருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) RM 4,000 அபராதம் விதித்தது.
குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளி அஹ்மத் ஃபசுகி (35) என்பவரை மாஜிஸ்திரேட் எஸ்.மகேஸ்வரி தண்டித்தார்.
அபராதம் செலுத்தத் தவறினால் நான்கு மாத சிறைவாசம் அனுபவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
குற்றப்பத்திரிகையின் படி, அஹ்மத் தனது முன்னாள் காதலியின் அரை நிர்வாண புகைப்படத்தை போலி இன்ஸ்டாகிராம் கணக்கைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவரின் பெயருடன் ஆகஸ்ட் 6 ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில் பதிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
ஒரு நபரின் அடக்கத்தை அவமதித்ததற்காக தண்டனைச் சட்டம் 509 வது பிரிவின் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது, இது அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டையும் விதிக்க வகை செய்யும் சட்டமாகும்!
0 Comments