loader
மலேசியாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா! வீரியம் மிக்க சிவகங்கை கொரோனா!

மலேசியாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா! வீரியம் மிக்க சிவகங்கை கொரோனா!

தமிழகத்தின் சிவகங்கையில் இருந்து மலேசியா வந்த  ஒரு முதியவர், 14 நாட்கள் தனிமைப்படுத்தச் சொல்லியும் அதைப் பொருட்படுத்தாமல், தமது உணவகத்திற்கு வந்து வழக்கமான பணியை தொடங்கியதால், அவர் மூலம் கொரோனா கிருமித்தொற்று கெடா, ஈப்போ, நாப்போவில் பரவத்தொடங்கியது. இந்தவகை கிருமித் தொற்றை சிவகங்கை தொற்று என மலேசியா வகைப்படுத்தியது.

இந்தக் கிருமித் தொற்று குறித்து தமிழக ஊடகங்கள் தெரிவித்திருக்கும் செய்தி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது அந்த முதியவர் மூலம் பரவி இருக்கும் சிவகங்கை  கிருமித்தொற்று ஜெரோம் வகையைச் சேர்ந்த மிக வீரியமான கொரொனாவக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது அதி வேகமாக பரவக்கூடியது என்றும் இதனால் சுமார் 7000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உலகமே வியக்கும் வண்ணம் கொரோனா தொற்றை மிகச் சிறப்பாகக் கையாண்டு  கட்டுப்படுத்திய மலேசியாவிற்கு இந்த ஜெரோம் வகை கொரொனா பெரும் தலைவலியாக இருக்கும் என்று அந்த ஊடகம் தெரிவித்துள்ளது!

0 Comments

leave a reply

Recent News