கொரோனா கிருமித் தொற்று தொடர்பில் நாட்டில் இன்று 14 புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 1 சம்பவம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகும். இதர 13 சம்பவங்கள் மலேசியர் சம்பந்தப்பட்டதாகும்.
இது வரை நாட்டில் கொரோனா கிருமித்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,999 பேர் ஆகும்.
இந்நோய்த் தொற்றினால் மரணமுற்றவர்களின் எண்ணிக்கை 125 ஆகும்.
இன்று 17 பேர் இத்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக டாக்டர் நூர்ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்!
0 Comments