கொரோனா கிருமித் தொற்று தொடர்பில் நாட்டில் இன்று 15 புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 4 சம்பவங்கள் இறக்குமதி செய்யப்பட்டவையாகும். மற்றவை உள்ளூர் சம்பந்தப்பட்டவையாகும்.
இது வரை நாட்டில் கொரோனா கிருமித்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,815 பேர் ஆகும்.
இதுவரை இந்நோய்த் தொற்றினால் மரணமுற்றவர்களின் எண்ணிக்கை 123 நபர்கள் என்றும், 8,562 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருப்பதாகவும் சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர்ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்!
0 Comments