கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொலை செய்யப்பட்ட மலேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் துணை பப்ளிக் பிராஸிகியூட்டர் கெவின் மொராய்ஸ் கொலை வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு இருந்த மருத்துவர் குணசேகரன் உட்பட அறுவருக்கு தூக்குத்தண்டனையை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.
இத்தீர்ப்பை உயர்நீதிமன்ற நீதிபதி அஸ்மான் அப்துல்லா இன்று மாலை 3.20 மணியளவில் வழங்கினார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு ஜலான் டூத்தா மாஸ் செந்தூலில் கடத்தப்பட்ட கெவின் மொராய்ஸ், பின்னர் சுபாங் ஜெயாவில் கொலை செய்யப்பட்டதோடு, சடலத்தை தோம்பில் அடைத்து வைத்து, சிமெண்ட் பூசி மறைத்து வைத்த குற்றத்திற்காக மருத்துவர் கர்னல் குணசேகரன் உட்பட ஆறுபேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களின் குற்றம் நிரூபனமானதை அடுத்து இன்று நீதிபதி தமது தீர்ப்பை அளித்தார்!
0 Comments