அன்வார்தான் பிரதமர் வேட்பாளர் என
பக்காத்தான் தலைமைத்துவ கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆட்சியை மீண்டும் கைப்பற்றுவதற்கான முயற்சிகளைத் தொடர வாரிசான் கட்சியின் தலைவர் ஷாஃபி அப்டால் உட்பட, அனைத்து தரப்பினருடனும் தொடர்ந்து விவாதிக்கவும் கலந்துரையாடவும் அன்வாருக்கு இப்போது முழு ஆணை உள்ளது என்றும் அந்த தலைமைத்துவ கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷாஃபியை பிரதமர் வேட்பாளராக நியமிக்கும் திட்டம் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம், அமானாவின் தலைவர் முகமட் சாபு மற்றும் டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் அன்வாரே பிரதமர் என்பதை வழிமொழியும் விதமாகக் கையெழுத்திட்டனர்!
0 Comments