loader
அடுத்த பிரதர் வேட்பாளர் ஷாபி அப்டால்! - மகாதீர் அறிவிப்பு

அடுத்த பிரதர் வேட்பாளர் ஷாபி அப்டால்! - மகாதீர் அறிவிப்பு

கோலாலம்பூர்-

சபா வாரிசான் கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் ஷாபி அப்டால்தான் அடுத்த பிரதமர்  வேட்பாளர் என துன் டாக்டர் மகாதீர் முகமட் அறிவித்திருக்கிறார். இதற்கு நம்பிக்கைக் கூட்டணியின் மூத்த தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாக டாக்டர் மகாதீர் தெரிவித்திருக்கிறார்.

ஷாபி, அமானா கட்சித் தலைவர் முகமட் ஷாபு, ஜ.செ.க. தலைவர் டான் ஶ்ரீ கோக் வாய் மற்றும் ஜ.செ.க. பொதுச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோருடன் கடந்த ஜூன் 25-ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெற்ற கலந்துரையாடல் சந்திப்பில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.

மேலும், பிகேஆர் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமை முதல் துணைப் பிரதமராகவும், டத்தோ ஶ்ரீ முக்ரிஸ் துன் மகாதீரை இரண்டாவது துணைப் பிரதமராகவும் நியமிக்க  மூத்த தலைவர்கள் ஒப்புக் கொண்டிருப்பதாகவும் மகாதீர் குறிப்பிட்டார். இந்நிலையில், மகாதீர் கூறுவதை, முஹமட் சாபுவும் லிம் குவான் எங்கும் மறுத்திருக்கின்றனர்!

0 Comments

leave a reply

Recent News