ரவாங் ஜூன் -27
கடந்த 10-ஆம் தேதி உடல்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட 'டத்தோஸ்ரீ' அந்தஸ்த்தைக் கொண்ட தொழில் அதிபரின் சடலம் ரவாங்கில் உள்ள கம்போங் கோஸ்கான் பகுதியில் போலீசாரால் மீட்கப்பட்டது.
இந்தக் கொலைச் சம்பம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த டத்தோஸ்ரீ கடத்தப்பட்ட நாளில் இருந்து 3 அல்லது 4 நாளில் கொலை செய்யப்பட்டு, பத்து 27 ஜாலான் ரவாங் பெஸ்தாரி ஜெயாவில் உள்ள புதர் ஒன்றில் வீசப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில சிஐடி தலைவர் டத்தோ ஃபாட்சில் தெரிவித்தார்.
இந்தக் கொலைச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 7 நபர்களை இன்று போலீசார் கைது செய்துள்ளதாகவும், மரணம் அடைந்த ஆடவர் கொலை செய்ப்படுவதற்கு முன் பணம் கேட்டு மிரட்டுவதற்காக அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது!
0 Comments