loader
இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் தற்கொலை! கொரோனா பாதிப்பால் விபரீத முடிவு!

இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் தற்கொலை! கொரோனா பாதிப்பால் விபரீத முடிவு!

நெல்லை: தமிழகத்தில் புகழ்பெற்ற திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங், கொரோனா பாதித்திருந்த நிலையில், தற்கொலை செய்து கொண்டார்.

உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹரிசிங் மருத்துவமனையிலேயே தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் ஹரிசிங். இந்த நிலையில் மன உளைச்சல் காரணமாக அவர் இன்று தற்கொலை  செய்து கொண்டதாகத் தெரிய வந்துள்ளது!

0 Comments

leave a reply

Recent News