பஹாங் ஜூன் 18-
எதிர்வரும் ஜூலை 4 ஆம் தேதி நடக்கவிருக்கும் சினி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட தேசிய முன்னணி கட்சி முடிவெடுத்துள்ள நிலையில் இன்று தேசிய முன்னணி அதன் வேட்பாளரை அறிவித்தது.
இம்முறை குவந்தான் வட்டார ஃபெல்டா இளைஞர் மன்றத்தின் தலைவர் முகமட் ஷாரிம் முகமாட் சாயின் என்பவரைத் தேசிய முன்னணி வேட்பாளராகத் தேர்வு செய்துள்ளது.
எதிர்வரும் ஜூன் 20 ஆம் தேதி சினி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெறவிருக்கும் நிலையில், தேசிய முன்னணி கட்சி இன்று தங்கள் கட்சியின் வேட்பாளர் யார் என்பதை அறிவித்துள்ளது!
0 Comments