loader
கொரோனா: இன்று 31 புதிய சம்பவங்கள்!

கொரோனா: இன்று 31 புதிய சம்பவங்கள்!

இன்று வியாழக்கிழமை 31 புதிய கொரோனா சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 11 இறக்குமதி சம்பவங்கள் (ஜூன் 11) எகிப்திலிருந்து திரும்பிய மலேசியர்கள் சம்பந்தப்பட்டதாகும் என  சுகாதார இயக்குனர் டத்தோ  டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருக்கின்றனர்.  இரண்டாவது ஸ்வாப் சோதனை நடத்தியபின்னர்  அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி பின்னர் வெளியேற்றுவோம்  என்ற வியாழக்கிழமை தனது தினசரி பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.

இத்துடன் நாட்டில் 8,369 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 118 பேர் பலியாகியுள்ளனர்!
 

0 Comments

leave a reply