loader
நடமாட்டக் கட்டுப்பாடு நீட்டிப்பா? அந்தத் தகவலில் உண்மை இல்லை! - இஸ்மாயில் சப்ரி

நடமாட்டக் கட்டுப்பாடு நீட்டிப்பா? அந்தத் தகவலில் உண்மை இல்லை! - இஸ்மாயில் சப்ரி

கோலாலம்பூர்: ஜூன் 9- ஆம் தேதிக்குப் பிறகு நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை நீட்டிக்கப்படும் என அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகத் தற்போது சமூகவலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. இந்நிலையில், இந்தச் செய்தியில் உண்மை இல்லை என தற்காப்புத்துறை அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் மறுத்தார்.

இது போலியான செய்தி என்றும், அதை நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

சரியான தகவல்களை தேசிய பாதுகாப்பு மன்றம் வலைத்தளத்திலிருந்து பெறுமாறு இஸ்மாயில் சப்ரி பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

அரசின் செயல்பாடுகள் குறித்த தெளிவான வழிகாட்டுதல்கள் அங்கு உள்ளன என்று அவர் கூறினார்.

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை முடிவுக்கு வர திட்டமிடப்பட்டிருந்த ஜூன் 9- க்குப் பிறகு, மாநிலங்களுக்கு இடையேயான பயணம் அனுமதிக்கப்படுமா என்ற பத்திரிகையாளரின் கேள்விக்கு தற்காப்பு அமைச்சர் பதிலளித்தார்.

 

0 Comments

leave a reply

Recent News