புத்ராஜெயா: நாட்டில் சனிக்கிழமை (மே 16) 17 புதிய கோவிட் -19 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நாட்டில் மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 6,872 ஆக உள்ளது.
இந்த 17 புதிய சம்பவங்களில் 6 இறக்குமதி செய்யப்பட்டவை என்றும், 11 உள்ளூர் பரிமாற்றங்கள் ஆகும் என்றும் சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷ அப்துல்லா தெரிவித்தார்.
அவற்றில், ஐந்து வழக்குகள் வெளிநாட்டினரிடையே கண்டறியப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில் 73 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.
மலேசியாவில் கோவிட் -19 இலிருந்து 5,512 நோயாளிகள் குணமடைந்துள்ளனர் என்று அவர் கூறினார்.
டாக்டர் நூர் ஹிஷாம் மேலும் கூறுகையில்,
தீவிர சிகிச்சை பிரிவுகளில் (ஐ.சி.யூ) 13 கோவிட் -19 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும், மேலும் இன்று ஒரு மரணச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதனால், இறப்பு எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது!
0 Comments