loader
கோவிட் 19: மலேசிய மருத்துவர் மரணம்!

கோவிட் 19: மலேசிய மருத்துவர் மரணம்!

இங்கிலாந்தின் பர்மிங்காமில் உள்ள ஒரு மருத்துவமனையில் நியோனாட்டாலஜி நிபுணத்துவம் பெற்ற மலேசிய மருத்துவர் ஒருவர் கோவிட் -19 தொற்றில் இறந்தார்.

பர்மிங்காம் மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் நியோனாட்டாலஜிஸ்டாக இருந்த டாக்டர் விஷ்ணா ரசியா தமது 48 வயதில் இறந்தார். அவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

நியோனாட்டாலஜி என்பது குழந்தை மருத்துவத்தின் ஒரு துணைப்பிரிவாகும், இது புதிதாகப் பிறந்த குழந்தைகளின் மருத்துவ கவனிப்பில் கவனம் செலுத்துகிறது.

அவர் தனது மகள் கேட்லினுக்கு அன்பான தந்தை என்றும், மலேசியா மற்றும் டிரினிடாட்டில் உள்ள குடும்பத்திற்குப் பிரியமானவர் என்றும் அவரது மனைவி லிசா கூறினார்.

"விஷ் தனது வேலையை நேசித்தார்; அவருடைய சகாக்களும் எங்கள் குடும்பத்தின் ஒரு பகுதியாக இருக்கிறார்கள். அவர் கவனித்துக்கொண்ட ஒவ்வொரு நோயாளியையும் குடும்பத்தினரையும் அவர் சொந்தமாகவே கருதினார்" என லிசா குறிப்பிட்டுள்ளார்!

0 Comments

leave a reply

Recent News