கோலாலம்பூர் ஏப்ரல்-23
கோவிட்-19 தொற்றுநோய் தாக்கத்திலிருந்து மலேசியா மெல்ல மெல்ல மீண்டு வரும் வேளையில், இன்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 71 பேராகப் பதிவாகியுள்ளது. அதே சமயத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,603 பேராக உயர்ந்துள்ளது.
அதே சமயத்தில், பூரண குணமடைந்தோர் எண்ணிக்கையும் 3,542 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் சுமார் 90 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் வழி மலேசியாவில் மட்டும் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சுமார் 63.2 விழுக்காட்டினர் பூரண குணமடைந்துள்ளனர்.
இதனிடையே, இன்று மேலும் இருவர் இந்தப் நோயின் பாதிப்பால் மரணமடைந்து, தற்போது இறந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்!
0 Comments