புது டில்லி: உலக நாடுகளில் தீவிர பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா பரவல் இந்தியாவிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று வரை 18,601 ஆக இருந்தது.
அதிக அளவாக மராட்டியத்தில் 4,666 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. 232 பேர் பலியாகி இருந்தனர். 572 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருந்தனர்.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு பற்றி மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 3,870 பேர் குணமடைந்தும், 15,474 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவித்துள்ளது.
இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19,984 ஆக உயர்வடைந்துள்ளது!
0 Comments