பொது நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவினால் வீடுகளில் முடங்கியுள்ளனர் மக்கள். நேரம் போகவில்லை, போரடிக்கிறது என்று நேரத்தின் அருமை தெரியாமல் சிலர் புலம்புகின்றனர்.
ஆனால், கிடைத்த நேரத்தையும் பொன்னாக்கி, இன்று மின்னும் நட்சத்திரங்களாகியிருக்கின்றனர் நம் மாணவச் செல்வங்கள்.
கிள்ளான், ராஜாமஹாடி இடைநிலைப்பள்ளியின் தமிழ்மொழிக்கழகம் மாணவர்களை ஒருங்கிணைத்து யூ டியூப்பில் நிகர்நிலை பட்டி மன்றத்தை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றனர்.
நேரலையாக நடைபெறும் இப்பட்டிமன்றத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு தலைப்பில் மாணவர்கள் அசத்துகிறார்கள். இது பலரின் பாராட்டுதலைப் பெற்று வருகிறது.
வீட்டில் இருந்தாலும் தங்கள் நேரத்தைப் பயனுள்ளதாய் மாற்றியிருக்கும் இந்த மாணவர்களும், இதனை ஏற்பாடு செய்தவர்களும் பாராட்டுதலுக்குரியவர்கள்.
ஏப்ரல் 20 மற்றும் 21-ஆம் தேதிகளில் நடைபெற்ற இப்பட்டிமன்றம் அடுத்து ஏப்ரல் 23-ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு நேரலையாக ஒளிபரப்பாகிறது!
கீழ்க்கண்ட இணைப்பில் கண்டு மகிழலாம்.
0 Comments