loader
நாட்டில் மொத்தம் 16 சிவப்பு மண்டலங்கள்!

நாட்டில் மொத்தம் 16 சிவப்பு மண்டலங்கள்!

மலேசியாவில்  கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கையை மாவட்டங்களின் அடிப்படையில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. இதில் தற்போது 16 சிவப்பு மண்டலப் பகுதிகள் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

40-க்கும் மேற்பட்ட கோவிட் 19 பாதிப்புகள் உள்ள பகுதிகள் சிவப்பு மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
ஆரஞ்சு மண்டலங்கள் (20 முதல் 40 பாதிப்புகள்), மஞ்சள் மண்டலங்கள் (20 க்கும் குறைவான பாதிப்புகள்) மற்றும் பச்சை மண்டலங்கள் (பாதிப்புகள் இல்லை). இந்நிலையில், மொத்தம் 41 பாதிப்புகளை பதிவு செய்த பின்னர், ஜோகூரின் கூலாயும் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் செயலில் உள்ள பாதிப்புகளின் தகவல் படி, 16 சிவப்பு மண்டலங்கள் உள்ளன – பெட்டாலிங், ஹுலு லங்காட், கோம்பாக், கிள்ளான், செராஸ், கெப்போங், லெம்பா பந்தாய், தித்திவாங்சா, ஜாசின், சிரம்பான், குளுவாங், ஜோகூர் பாரு, குவாந்தான், கூச்சிங், கோத்தா சமராஹான் மற்றும் தவாவ் ஆகிய பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன!

0 Comments

leave a reply

Recent News