loader
அறிகுறி இல்லாமல் 186 பேருக்கு கொரோனா!

அறிகுறி இல்லாமல் 186 பேருக்கு கொரோனா!

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரசுக்கு 507 பேர் பலியாகி உள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை 15,712 ஆக உயர்வடைந்து உள்ளது.  இதுவரை 2,230 பேர் குணமடைந்தும், 12,974 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர்.

இவற்றில் டெல்லியில் 1,893 பேருக்கு பாதிப்பு உள்ளது.  42 பேர் பலியாகி உள்ளனர்.  இந்நிலையில், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, ஊரடங்கு தொடர்வது அவசியம்.  ஹாட்ஸ்பாட் பகுதிகளுக்கு தளர்வுகள் கிடையாது.  வரும் 27-ஆம் தேதி ஆய்வுக் கூட்டமொன்று மீண்டும் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், டெல்லியில் அறிகுறி இல்லாமல் 186 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என நேற்று உறுதி செய்யப்பட்டது.  கொரோனா பாதிப்பு உள்ளது பற்றி அவர்கள் அறிந்திருக்க கூட இல்லை.  இது அதிக வேதனை அளிக்கிறது.

டெல்லியில் அதிவிரைவாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது.  எனினும் கட்டுக்குள்ளேயே அது உள்ளது.  அதனால் பயப்பட வேண்டியதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்!

0 Comments

leave a reply

Recent News