புத்ராஜெயா: மலேசியாவில் 170 புதிய கோவிட் -19 நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இதனால், நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 4,987 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இறந்தவர்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்வு கண்டுள்ளது என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
குணமடைந்தோர் எண்ணிக்கை இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணி நிலவரப்படி 202 பேர் ஆகும்.
மலேசியாவில் கோவிட் -19 இலிருந்து 2,478 நோயாளிகள் மீண்டு வந்துள்ளனர்.
தற்போது, 60 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவுகளில் (ஐ.சி.யூ) சிகிச்சை பெற்று வருகின்றனர. அவர்களில் 33 பேர் வென்டிலேட்டர் பிரிவில் உள்ளவர்கள்!
0 Comments