loader
நாட்டில் 1,830 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்!

நாட்டில் 1,830 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்!

புத்ராஜெயா: நேற்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) மொத்தம் 118 புதிய கோவிட் -19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,346.

மேலும் மூன்று புதிய இறப்புகளும் நிகழ்ந்துள்ளது. இதனையடுத்துமலேசியாவில் கோவிட் -19 இறப்பு எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி 222 கோவிட் -19 நோயாளிகள் வெளியேற்றப்பட்டதாக சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா அறிவித்தார்.

மலேசியாவில் கோவிட் -19 இலிருந்து 1,830 நோயாளிகள் மீண்டு வந்துள்ளனர்.

தற்போது, ​​69 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) சிகிச்சை பெற்று வருகின்றனர்!

0 Comments

leave a reply

Recent News