loader
கோவிட் -19: தமிழ் நாட்டில் சிகிச்சை பெறும் மலேசியர்!

கோவிட் -19: தமிழ் நாட்டில் சிகிச்சை பெறும் மலேசியர்!

சென்னை ஏப்ரல்- 9

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 5000-க்கும் மேலாக உயர்ந்துள்ள  நிலையில், உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே   இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ள தமிழ்நாட்டில், ஏப்ரல் 8-ஆம் தேதி வரை 738 கொரோனா பாதிப்பு பாதிவாகியுள்ளது. நேற்று மட்டும் 48 பதிவுகளை  தமிழ்நாடு
எட்டியுள்ளது.  இதில் 42 கொரோனா பதிவுகள் டெல்லி இஸ்லாமிய  மாநாட்டுடன் தொடர்புடையவை. அதில் ஒரு மலேசியரும் இடம்பெற்றுள்ளார் என  தமிழ்நாடு  சுகாதாரத்துறை  செயலாளர் பீலா ராஜேஸ் தெரிவித்தார். 

இதுவரை 6095 பேரிடம் சோதனை நடத்தியதில், ஏப்ரல் 7 -ஆம் தேதி  வரை 690 கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகின.  ஏப்ரல் 8-ஆம் தேதி மேலும் 48 பதிவுகள் இடம்பெற்று 738-ஆகப் பதிவாகியுள்ளது. மேலும், 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதையும் பீலா ராஜேஸ் உறுதிசெய்தார்!

0 Comments

leave a reply

Recent News