(வெற்றி விக்டர்)
கோலாலம்பூர் ஏப்ரல்-8
தற்போது கோவிட்-19 வைரஸ் பாதிப்பை எதிர்த்து, அதனைத் துடைத்தொழிக்கும் முயற்சியில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது மலேசியா. குறிப்பாக அதிக பாதிப்புக்குள்ளான நாடுகள் பட்டியலிலிருந்து மலேசிய இறக்கம் கண்டதோடு, அதிகமானோரைக் குணமடையச் செய்து மக்களுக்கு நம்பிக்கை ஊட்டியுள்ளது.
ஓய்வின்றி மருத்துவமனையில் முயற்சியைக் கைவிடாமல் பணியாற்றும் மருத்துவக்குழு.
மழை வெயில் பாராமல் நமக்காகத் தெருவில் நிற்கும் போலீஸ், ராணுவம், ரேலா.
நமது சுற்றுவட்டாரத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள தங்களது பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல் துப்புரவுப் பணியில் இருக்கும் பணியாளர்கள்.
நமது அன்றாடத் தேவைகள் கிடைக்க வெளியில் வேலை செய்யும் அனைத்து தரப்பினர், மக்களுக்கு உடனுக்குடன் தகவல் தருவதற்குப் பாடுபடும் ஊடகவியலாளர்கள்.
அரசாங்கம் சொன்னதை உங்வாங்கி, இதன் பாதிப்பை உணர்ந்து வீட்டில் இருந்த மக்கள்.. என இப்படி அனைவரது ஒத்துழைப்பும் மலேசியாவிற்குப் புத்துயிர் கொடுத்துள்ளது.
இது அரசாங்கத்திற்கு ஒரு வலிமையைக் கொடுத்துள்ளது. அந்த வகையில், செய்தியாளர்கள் சந்திப்பில் உற்சாகத்துடன் நாம் நிச்சயம் வெல்வோம் என முழக்கமிட்டுள்ளார் மலேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப்.
இதனைத் தொடர்ந்து '# நாம் நிச்சயம் வெல்வோம்' என்ற ஹேஷ்டேக் தற்போது டிரெண்டாகி மலேசியாவின் முழக்கமாக மாறி வருகிறது!
0 Comments