உலக வங்கிக் குழுமம், கோவிட்-19 நச்சுத்தொற்றால் உலகின் பொருளாதாரம் மிகப் பெரிய மந்தநிலையை எதிர்கொள்ளக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
ஏழ்மை நிலையில் உள்ள நாடுகளில் இது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று வங்கிக் குழுமத் தலைவர் டேவிட் மால்பாஸ் எச்சரித்துள்ளார்.
எனவே, அத்தகைய நாடுகளுக்குப் பெரிய அளவிலான ஆதரவுத் திட்டங்கள் வழி உதவ உலக வங்கி திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக, எத்தியோப்பியா, கென்யா உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உத்தேசித்துள்ளாதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்!
0 Comments