கொரோனா வைரஸ், தற்போது 185 நாடுகளுக்கு மேல் பரவி உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலகில் வளர்ந்த நாடுகளே இந்த வைரஸை கட்டுப்படுத்துவதில் திணறி வருகின்றன. இதில் இருந்து தப்பிப்பதற்கான சிறந்த வழி சமூகத்தில் இருந்து விலகி இருப்பது மட்டுமே என்பதால், மக்களுக்கு அனைத்து நாடுகளும் இதையே வலியுறுத்துகின்றன. பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவரமாக மேற்கொள்ளப்பட்டாலும், கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதிவேகமாகப் பரவி வருகிறது. இதுவரை உலகளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டியுள்ளது.
அதுமட்டும் இல்லாமல் இந்த வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை உலகம் முழுக்க 47 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பீதியை ஏற்படுத்தியுள்ளது!
0 Comments