அமெரிக்காவில், COVID-19 கிருமித்தொற்றால், ஒரே நாளில் 780-க்கும் மேற்பட்ட மரணங்கள் முதல் முறையாக நேற்று பதிவாகியுள்ளன.
இரண்டு நிமிடத்திற்கு ஒருவர் இறந்து வருவதாகத் தெரிகிறது.
அமெரிக்காவின் கிருமித்தொற்று மையமாக உருவெடுத்துள்ள நியூயார்க் மாநிலத்தில் பெரும்பாலான மரணங்கள் நேர்ந்தன.
இன்னும் சில வாரங்களில் அங்கு நிலைமை மேலும் மோசமடையலாம் என்பதால், டிரம்ப் நிர்வாகத்திடம் மாநில மேயர் பில் டி பிலாசியோ (Bill de Blasio) கூடுதல் உதவிக்கான கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுவரை 3,700-க்கும் அதிகமானோர் அமெரிக்காவில் கோவிட்-19 கிருமித்தொற்றுக்குப் பலியாகிவிட்டனர்.
2001-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட செப்டம்பர் 11 தாக்குதலில் மாண்டோரைக் காட்டிலும் இது அதிகம்!
0 Comments