கோலாலம்பூர், மார்ச் 30-
உலகை அச்சுறுத்தும் உயிர்க்கொல்லி நோயான கோவிட் 19 உலகம் முழுக்க எண்ணற்றோரை பலியாக்கி வருகிறது.
இந்நிலையில், நமது நாட்டைப் பொருத்தமட்டில் இந்த நோய் தொற்றின் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களில் 479 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என்பது சற்று ஆறுதலான செய்தி.
கோவிட் 19 சம்பவங்கள் இன்று 156-ஆகப் பதிவாகியுள்ள வேளையில், நோய்த் தொற்று ஏற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2626-ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 91 பேர் இந்த நோய்த் தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளார்கள். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கைய 479-ஆக அதிகரித்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். மேலும் இந்த நோய் தொற்றுக் காரணமாக மூவர் மரணமடைந்துள்ளதாகவும் டாக்டர் நூர் ஹிசாம் கூறினார்!
0 Comments