நாட்டில் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இன்று சனிக்கிழமை மேலும் ஒருவர் கொரோனா நச்சுத்தொற்றால் மரணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளாது.
ஜொகூர் தங்காக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த நபர், இன்று காலை மரணமடைந்ததாக சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஸாம் தெரிவித்தார்.
இத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27-ஆக உயர்வு கண்டுள்ளாது.
மேலும் இன்று 159 புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளதோடு, அவர்களில் 70-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,320-ஆக அதிகரித்துள்ளது!
0 Comments