புத்ரா ஜெயா: அமைச்சர்கள் மற்றும் துணையமைச்சர்களின் இரண்டு மாத சம்பளத்தை கோவிட் 19 நிதிக்காக வழங்கியிருப்பதாக பிரதமர்துறை அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அவ்வகையில் சுமார் 84 லட்சம் வெள்ளி நிதி திரட்டப்பட்டுள்ளதாக பிரதமர்துறை அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டில் வேகமாகப் பரவி வர கொரோனா நச்சுத்தொற்றால் பல தீவிர நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் அவசியமாகிறது என்பதால், நாட்டின் நலன் கருதி நிதி ஆதாரத்தை கோவிட் 19 பேரிடருக்காக ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அவ்வகையில் அமைச்சர்கள் தங்கள் இரண்டு மாத சம்பளத்தை வழங்கியுள்ளனர்!
0 Comments