loader
இத்தாலியில் தொடரும் பயங்கரம்- ஒரே நாளில் 743 பேர் பலி!

இத்தாலியில் தொடரும் பயங்கரம்- ஒரே நாளில் 743 பேர் பலி!

ரோம்: கொரோனாவால் இத்தாலியில் ஒவ்வொருநாளும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகின்றனர். இத்தாலியில் ஒரே நாளில் 743 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7000-த்தை தாண்டியுள்ளது.

கொரோனா தாக்கம் தொடங்கிய சீனா தற்போது அதில் இருந்து விடுபட்டிருப்பதாக அறிவித்திருக்கிறது. ஆனாலும் உலகம் இதனை முழுவதுமாக நம்பவும் இல்லை.

ஏனெனில் கொரோனாவின் தாக்கம் உலகையே நிர்மூலமாக்கி வருகிறது. ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக கொரோனா விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

இத்தாலியில் இந்த எண்ணிக்கை இன்னமும் அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது. அதே வேளையில் ஸ்பெயினிலும் ஒரே நாளில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது!

0 Comments

leave a reply

Recent News