loader
கொரோனாவுக்கு மலேரியா மாத்திரை! - அமெரிக்க அதிபர் அறிவிப்பு

கொரோனாவுக்கு மலேரியா மாத்திரை! - அமெரிக்க அதிபர் அறிவிப்பு

மலேரியா சிகிச்சைக்காக பயன்படுத்தும் மருந்தை கொரோனா தடுப்புக்காகவும் பயன்படுத்தலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது . இதுவரையில் இந்த வைரஸைத் தடுக்க மருந்து கண்டுபிடிக்கப்படாததால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் இதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதற்கிடையே கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளிலும் தீவிர ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.

ஜப்பான் நாட்டு தயாரிப்பான favipiravir என்ற காய்ச்சலுக்கான மருந்து கொரோனா சிகிச்சைக்கு நல்ல பலன் அளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது. வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்து கண்டுபிடிக்க உலகம் முழுவதும் ஆராய்ச்சியாளர்கள் இரவும் பகலுமாகப் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் மலேரியா சிகிச்சைக்கான மருந்தை கொரோனாவுக்கும் பயன்படுத்தலாம் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பு அறிவித்துள்ளார்.திடீரென செய்தியாளர்களை சந்தித்த அவர் அதிரடியாக இதை அறிவித்தார்.

இந்த மருந்துக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி அளித்திருப்பதையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார் . இந்நிலையில் இந்த மருந்தை பயன்படுத்தும் நடவடிக்கையில் அந்நாட்டு மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்!

0 Comments

leave a reply

Recent News