சீனாவின் வூகான் நகரில் தோன்றி உலகம் முழுவதும் 155 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இத்தாலி, ஈரான் போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உலகளவில் 7,157 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை, 1,82,438 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அதில், 79 ஆயிரத்து 212 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
எந்த மாதிரியான மனிதர்களைக் கொரோனா தாக்கும் ?
1. 70 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள்.
2. ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் நோய், மூச்சுக்குழாய் அழற்சி
3. இதயச் செயலிழப்பு போன்ற நீண்டகால இதய நோய்.
4. நாள்பட்ட சிறுநீரக நோய்.
5. நீரிழிவு நோய்.... மண்ணீரலில் உள்ள சிக்கல்கள்
6. கடுமையான சிறுநீரக நோய்.
7. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள்.
8. சிகிச்சையின் எந்தக் கட்டத்திலும் இருக்கும் ரத்தப் புற்றுநோய் அல்லது லுகேமியா போன்ற எலும்பு மஜ்ஜை உள்ளவர்கள்.
9. கர்ப்பமாக இருப்பவர்கள்.
இங்கிலாந்து சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள தகவல் இது!
0 Comments