நேற்று திருச்செந்தூர் சுப்ரமணியர் சுவாமி திருக்கோயிலுக்கு சென்று பிரார்த்தனையில் ஈடுபட்ட நடிகர் வடிவேலுவிடம், பத்திரிக்கையாளர்கள் மீம்ஸ் குறித்து கேள்விகள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த வடிவேலு மீம்ஸ் கிரியேட் டர்கள் எனக்கு கடவுள் மாதிரி. நான் இந்த ஒன்றரை வருடகாலம் சினிமாவில் இல்லை என்றாலும் , அவர்கள் மீம்ஸ் மூலம் மக்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள் அதற்கு நானும் ஒரு காரணமாக இருப்பது சந்தோஷமாக இருக்கிறது.
ரொம்ப அழகாக மீம்ஸ் செய்கிறார்கள். மக்களை சிரிக்க வைக்கிறார்கள் சிந்திக்கவும் வைக்கிறார்கள். யாருடைய மனதும் புண்படாத படி அவர்கள் மீம்ஸ் கிரியேட் பண்ண வேண்டும் என்பது எனது ஆசை. அவர்கள் அனைவருக்கும் எனது நன்றி என வடிவேலு தெரிவித்தார்!
0 Comments