ஏலியன்கள் குறித்து ஏராளமான விஷயங்களும், கற்பனைக்கு எட்டாத கருத்துகளும் உலாவிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், பூமியில் கார்பன் உடலோடு ஏலியன்கள் இருக்கின்றன. இதனால் ஏலியன்களை அவ்வளவு சீக்கிரம் பூமியில் அடையாளம் காண மனிதர்களால் முடிவதில்லை என, நாசா விஞ்ஞானி ஒருவர் கூறியிருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சில ஏலியன்கள் பூமிக்கு இனச் சேர்க்கைக்காக வந்து செல்கின்றனர் என்றும் கூறப்படுகின்றது.
ஏலியன்கள் யார்?
ஏலியன்கள் என்பது மனித உருவத்தை விட பெரியதாகவும், அல்லது சிறியதாகவும், இந்து சமய புராணங்களில் குறிப்பிட்ட கடவுள்தான் ஏலியன்கள் என்றும் ஒரு சில ஆய்வாளர்கள் கருத்துகளை முன் வைத்து வருகின்றனர். இதிகாசம், புராணங்களில் சொல்லப்பட்டுள்ள கடவுள்கள் குறித்து நாசாவும் ஆராய்ந்து வருகிறது.
ஏலியன்கள் மனிதர்களுடன் இணைந்து குழந்தைகளைப் பெற்றுள்ளனர் என்று விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். மேலும், பூமிக்கு வந்த போது ஏலியன்கள் இணைந்து குழந்தைகளைப் பெற்றுள்ளனர். இதுவரை பல்வேறு தேசங்களிலும் ஏலியன்கள் போன்று மனித - ஏலியன் குழந்தைகளும் பிறந்து வருகின்றன. அவர்கள் உறவினர்களைப் பார்க்க வருகின்றனர். மனித-ஏலியனுக்குப் பிறந்தவர்கள் ஏலியன்களுக்கு உறவினர்களாக இருக்கின்றனர். இவர்களின் சமிக்ஞையால் ஏலியன்கள் பூமிக்கு வருவதாகவும், நலம் விசாரித்துச் செல்லப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஒரு சில பெண்களின் கணவன் மார்கள் ஏலியன்களாக இருப்பதால், இணை சேர்க்கைக்காகவும் அவர்கள் வந்து சென்றுள்ளனராம். எது உண்மை என்பது அடுத்தடுத்த ஆய்வுகளில்தான் வெளிப்படும்!
0 Comments