இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள கோடிக்கணக்கான பால்வெளியில் பூமியைப் போன்றே உயிரினங்கள் வாழ சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானம் சொல்கிறது.
அந்த வகையில் வேற்றுக்கிரகவாசிகளை ஏலியன் என்று அழைக்கிறது மேல்நாட்டு ஹாலிவுட் சினிமா. ஏலியன் கதை சொல்லும் பல திரைப்படங்கள் ஹாலிவுட்டில் வெளிவந்துள்ளது. ஹாலிவுட்டின் முதல் ஏலியன் திரைப்படம் ஈடி மற்றும் மென் இன் பிளாக் போன்ற படங்கள் ஏலியன் பற்றிய கதைகளை அதிகம் சொன்னது.
ஆனால் ஏலியன் தமிழில் அயலானாக வலம் வரவிருக்கிறது. அயலான் என்ற தமிழ்த் திரைப்படம் இப்போது தயாராகி வருகிறது. நம்ம வீட்டு பிள்ளை சிவகார்த்திக்கேயனும் வேற்றுக்கிரகப்பிள்ளை அயலானும் கைகோர்க்கின்றனர்.
இப்படத்தில் யோகி பாபு இருப்பது இன்னும் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது. யோகி பாபு, சிவகார்த்திகேயன் ஏலியன் கொம்போவால் நிச்சயம் காமெடிக்குப் பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கலாம்.
'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ஆர்.ரவிக்குமார்தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். இதனால், பிரமாண்டங்களையும் ஆச்சரியத்தையும் படத்தில் எதிர்பார்க்கலாம். இந்த அயலான் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட ஏலியன் எனக் கூறப்படுகிறது.
24 ஏம்ஸ்டுடியோ மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் இத்திரைப்பத்தில் பானுப்ரியா, ரகுல் பீரித் சிங், கருணாகரன், ஷரத் கெல்கர் உள்பட பலர் நடிக்கின்றனர்.
இப்படத்தில் நடிக்கும் ஏலியன் உருவத்தை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த ஏலியன் சிவகார்த்திகேயனுடன் லாலிபாப் சாப்பிடுகிறது. எனவே தமிழில் தயாரிக்கப்படும் இந்த ஏலியன், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் ஏலியனாக இருக்கும் என்கிறார்கள் படக் குழுவினர்!
0 Comments