பெய்ஜிங் பிப்ரவரி-18
கொரோனா வைரஸ் எனப்படும் கோவிட்-19 வைரஸ் தாக்கத்தால் வூஹானில் உள்ள ஒரு மருத்துவமனையின் இயக்குனர் இன்று காலமானார்.
லீயூ சீமிங் எனும் அந்த மருத்துவர் சீனாவின் மருத்துவத்துறை பணியில் நீண்ட காலம் அனுபவம் உள்ளவர். அதோடு வூஹானில் உள்ள ஒரு மருத்துவமனையின் இயக்குனாராக இருந்தவர்.
அவரது மரணம் முதலில் ஊடகத்திலும் சமூகவலைத்தளங்களிலும் பரவத்தொடங்கியது. இருந்தபோதும் மருத்துவர் மற்றும் அரசுத் தரப்பில் இருந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது என்ற செய்தியே முதலில் வெளிவந்தது. பின்னர் அவர் இறந்துவிட்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதுவரைக்கும் சீனாவில் கோவிட் -19 வைரஸ் தாக்கத்தால் உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை 1900 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆயிரமாக அதிகரித்துள்ளது!
0 Comments