இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கொழும்பு சின்னமன் கிராண்ட் ஹோட்டலும் தாக்குதலுக்குள்ளானது. இந்த ஹோட்டலில்தான் நடிகை ராதிகாவும் தங்கியிருக்கிறார். குண்டு வெடிப்பதற்குச் சற்று நேரத்திற்கு முன்புதான் அந்த ஹோட்டலைக் காலி செய்து விட்டுக் கிளம்பி இருக்கிறார். இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ’’அடக்கடவுளே… இலங்கையில் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளது. கடவுள் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். நான் தற்போது தான் சின்னமன் கிராண்ட் ஹோட்டலில் இருந்து கிளம்பினேன். அங்கும் குண்டு வெடித்துள்ளது. நம்ப முடியவில்லை இது அதிர்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்!
0 Comments