loader
கொரோனாவால் ஒரே நாளில் 242 பேர் பலி!

கொரோனாவால் ஒரே நாளில் 242 பேர் பலி!

 

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு கடந்த 9-ஆம் தேதி 81 பேர் உயிரிழந்தனர்.  பின்னர், பலி எண்ணிக்கை 803 ஆக உயர்ந்தது.  இதேபோன்று 2,147 பேர் கூடுதலாக வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகினர்.  இதனால் சீனா முழுவதும் 36,690 பேருக்கும் கூடுதலாக நோய் பாதிப்பிற்கு ஆளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது, கடந்த 2002 மற்றும் 2003ம் ஆண்டுகளில் ஏற்பட்ட சார்ஸ் வைரஸ் தாக்குதலுக்கு 774 பேர் பலியான  எண்ணிக்கையை விட அதிகம். தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் இந்த எண்ணிக்கை உயர்ந்து 908 ஆகவும், 1,011 ஆகவும் உயர்வடைந்தது.

இந்நிலையில், நேற்று 94 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதனால் பலி எண்ணிக்கை 1,110 ஆக அதிகரித்து உள்ளது.  இதேபோன்று 1,638 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  இதனால் 44,200-க்கும் கூடுதலான பேருக்கு சீனா முழுவதும் வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டது.

ஒரே நாளில் 242 பேர் பலியான நிலையில், வைரஸ் பாதிப்பிற்கு பலியானோர் எண்ணிக்கை இன்று 1,350ஐ கடந்துள்ளது.  இதேபோன்று 14,840 பேருக்கு கூடுதலாக வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.  இதனால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது!

0 Comments

leave a reply

Recent News